சென்னை, செப். 9- “ஒரு முறை குதிரைப் பந்தயத் துக்கு (ரேஸ்) போய் வந்தவன், அவன் சொத்து முழுவதையும் அழிக்கும் வரை அதில் இருந்து மீண்டு வரமாட்டன்”என்று அஞ்சிய காலம் உண்டு. அப்படி ஒரு போதை அதில் இருந்தது. அந்த நபர்களை “ரேஸ் பைத்தியம்” என்று அழைத்த னர். அன்றைய காலக் கட்டத்தில், பெரிய பெரிய சினிமா நட்சத்திரங் கள்,பணக்காரர்கள், ஏழை என்ற பாகுபாடு இல்லாமல் ரேஸ் பைத்தியமாக இருந்தனர். கிண்டி குதிரை ரேஸில் இன்றைய தினம் யார் ஜெயிப்பார்கள்? என்பதை அன்றைய தினசரி நாளேடுகள் சிலது பக்கம் பக்கமாக எழுதுவது வாடிக்கையாகும். அந்த காலத்தில் கிண்டி குதிரை பந்தயத்திற்கு சென்றவர்கள் முழு பணத்தையும் கோட்டை விட்டு நிற்பார்கள். இதில் சொந்த வீட்டை யும் நிலத்தையும் இழந்தவர்கள் ஏராளம் ஏராளம். லட்சக்கணக்கில் பணம் கொண்டு சென்றாலும் ஒரு ரூபாய் கூட திரும்பி கொண்டு வர முடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. திரைத்துறையில் சம்பாதித்த பணத்தை குதிரை பந்தயத்தில் இழந்தவர்களும் உண்டு. லாட்டரி சீட்டுக்கு மக்கள் எப்படி அடிமையாகிக் கிடந்தார் களோ அதைப்போல் கிண்டி குதிரை ரேஸ்க்கும் அடிமையாக கிடந்தனர். 1973 ஆம் ஆண்டு, திமுக ஆட்சியில் தான் இந்த குதிரைப் பந்தயத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், இதையும் எதிர்த்து நீதிமன்றத் திற்கு சென்றனர். வெற்றி பெற்றனர். மீண்டும் ரேஸ் தொடங்கப்பட்டது. இது பழைய வரலாறு. சென்னை கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு, கடந்த 1945 ஆம் ஆண்டு 160 ஏக்கர் 86 சென்ட் நிலம் 99 ஆண்டுகள் குத்தகை அடிப் படையில் தமிழ்நாடு அரசு வழங்கி யது. இந்த குத்தகைக் காலம் வரும் 2044 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலத்தை குத்தகைக்கு விடும் போது ஆண்டுக்கு ரூ.614.13 காசு வாடகையாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 1970 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி முதல் இந்த வாடகையை உயர்த்து வது தொடர்பாக விளக்கமளிக் கும் படி மாம்பலம் - கிண்டி வட்டாட்சி யர் நோட்டீஸ் பிறப்பித்தார். ஆனால் அதற்கு பதிலளித்த மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம், வாடகையை உயர்த்துவது தொடர்பாக கடந்த 1945 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தில் எந்தப் பிரிவும் சேர்க்கப்படவில்லை என தெரிவித்தது. இதை ஏற்க மறுத்த தமிழ்நாடு அரசு, 1970 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்துக்கு வாடகை பாக்கி தொகையாக ரூ.730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாய் செலுத்தும்படி உத்தரவு பிறப்பித்தது. இந்த நோட்டீசை எதிர்த்து மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஆங்கி லேயர் ஆட்சிக்காலத்தில் வசதி படைத்த பணக்காரர்கள் குதிரை கள் மீது பெரிய தொகையை பந்தயம் கட்டி விளையாடுவதற்கு மாநகரின் மையப்பகுதியில் சுமார் 160 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது அங்கு நடைபெறும் செயல்கள் எந்தப் பொதுநலனும் இல்லை. அந்த நிலத்தை மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் உள்வாடகைக்கு விட்டு பெரும் தொகையை சம்பாதித்து வருகிறது. எனவே, இந்த நிலத்தை மீட்டு தமிழ்நாடு அரசு ஏழை, எளிய மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் வளர்ச்சித் திட்டங்களுக் காக பொதுநல நோக்கில் பயன்படுத்தலாம். ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட நோட்டீசின் அடிப்படையில் செலுத்த வேண்டிய ரூ.730.9 கோடி வாடகை பாக்கியை ஒரு மாதத்துக் குள் தமிழ்நாடு அரசுக்கு மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் ரேஸ் கிளப் நிர்வாகம் வசம் உள்ள 160 ஏக்கர் நிலத்தை மீட்டு, அந்த நிலத்தை பொதுநலனுக்காக அரசு பயன் படுத்த வேண்டும் என உத்தர விட்டிருந்தது. இந்நிலையில், வாடகை பாக்கி செலுத்தாததால் சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் கிளப் மைதானத் திற்கு வருவாய்த்துறை அதிகாரி கள் திங்களன்று சீல் வைத்துள்ள னர்.